செய்திகள் மலேசியா
கடந்த 12 மணி நேரத்திற்குள் சபா, சரவாக்கில் 2 பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
கோலாலம்பூர்:
கடந்த 12 மணி நேரத்திற்குள், சபாவின் ரானாவ், சரவாக்கின் மம்போங் ஆகிய இடங்களில் 2.9 ரிக்டர் அளவிலான இரண்டு பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரானாவ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காலை 10.36 மணிக்கு, 10 கி.மீ. ஆழத்தில் கண்டறியப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தின் மையம், வடக்கு அட்சரேகை 6.07°, கிழக்கு தீர்க்கரேகை 116.58° இல் அமைந்திருந்தது.
சபாவில் உள்ள குண்டாசாங், ரானாவ் மற்றும் கோட்டா பெலூட் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
அதே நாளில், இரவு 10.33 மணிக்கு மாம்போங்கில் 10 கி.மீ. ஆழத்தில் அதே அளவுள்ள மற்றொரு பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது என்று ஹிஷாம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:53 pm
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
June 4, 2026, 12:52 pm
10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்
June 4, 2026, 12:51 pm
11 மாத குழந்தையைக் கொன்றதாக இரண்டு குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது
June 4, 2026, 12:50 pm
மலேசியாவில் கட்டாய தொழிலாளர் நடைமுறைகள் இல்லை: அமைச்சு
June 4, 2026, 12:07 pm
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
June 4, 2026, 11:26 am
