செய்திகள் உலகம்
தெற்கு சூடானில் மனிதாபிமான பேராபத்து: மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என ஐ.நா. எச்சரிக்கை
ஜெனீவா:
தெற்கு சூடானில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், 7.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது நாட்டின் கிட்டத்தட்ட பாதி மக்கள் உடனடி உணவு உதவிக்காக காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
World Food Programme (WFP) தெரிவித்ததன்படி, ஜோங்லேய் மாநிலத்தின் அகோபோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சம் மற்றும் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வருவது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 60,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசர உணவு உதவி வழங்கப்பட்டுள்ளதாக WFP தெரிவித்துள்ளது.
மேலும், 15,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,000 பேர் உடனடி சிகிச்சை தேவைப்படும் நிலைமையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், உள்நாட்டு மோதல்கள், தீவிர வறுமை, ஊழல், பாதுகாப்பு நெருக்கடிகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் உள்நாட்டுப் போரின் விளிம்பில் நாடு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இதற்கிடையில், கனமழை காரணமாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் பணிகளும் கடுமையாக பாதிக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. 33 லாரிகள் மூலம் 300 டன்களுக்கும் அதிகமான உணவு, நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. ஆனால் மழைக்காலம் தொடங்கியதும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்காக்கும் இந்த உதவித் திட்டங்களைத் தொடர்வதற்காக, WFP-க்கு உடனடியாக 266 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுவதாகவும், கூடுதல் நிதி கிடைக்காவிட்டால் உணவுப் பங்கீடுகள் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பசி, ஊட்டச்சத்து குறைபாடு, மோதல்களின் மத்தியில், தெற்கு சூடானின் கோடிக்கணக்கான மக்கள் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தில் தத்தளித்து வருகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
