செய்திகள் உலகம்
அமெரிக்க காகித ஆலையில் கொடிய இரசாயன வெடிப்பு: உயிருடன் யாரும் மீள வாய்ப்பில்லை என அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஜப்பானிய நிறுவனத்துக்குச் சொந்தமான நிப்பான் டைனாவேவ் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர இரசாயனத் தொட்டி வெடிப்பு, மாநிலத்தின் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான தொழில்துறை பேரழிவாக மாறியுள்ளது. இந்த விபத்தில் உயிருடன் யாரையும் மீட்கும் நம்பிக்கை இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாங்வியூவில் அமைந்துள்ள ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த இந்த வெடிப்பில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒன்பது பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. “மீட்புப் பணிகள் தற்போது உடல் மீட்பு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளன” என கவுலிட்ஸ் மாவட்ட தீயணைப்புத் தலைவர் ஸ்காட் கோல்ட்ஸ்டீன் தெரிவித்தார்.
900,000 கேலன் கொள்ளளவு கொண்ட ‘வெள்ளைக் கரைசல்’ (White Liquor) நிரப்பப்பட்ட இரசாயனத் தொட்டிதான் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காகிதக் கூழ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பைடு போன்ற ஆபத்தான இரசாயனங்கள் வெளியேறியதால், சம்பவ இடம் முழுவதும் நச்சு அச்சத்தில் மூழ்கியுள்ளது.
வெடிப்பு நிகழ்வதற்கு வெறும் 15 நிமிடங்களுக்கு முன்பே தொழிலாளர்களின் பணிமாற்றம் நடைபெற்றதால், நிர்வாக அலுவலகம், ஓய்வு அறை, செயல்பாட்டு மையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பேரழிவு சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதித்துள்ளது. கொலம்பியா ஆற்றில் இரசாயன மாசு பரவியதையடுத்து, ஆற்றங்கரையில் பல மீன்கள் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், லாங்வியூ நகரின் குடிநீர் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து 46 கூட்டரசு பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வான்வழிக் கண்காணிப்பு, நச்சு நீக்க நடவடிக்கை, பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 12:51 pm
‘டிஜிட்டல் காலனித்துவத்தின்’ கருவியாக AI மாறும் அபாயம்: அன்வார் எச்சரிக்கை
June 9, 2026, 4:28 pm
ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
June 9, 2026, 4:16 pm
H1-B விசா கட்டண உயர்வு ரத்து: ட்ரம்ப்புக்கு பின்னடைவு
June 8, 2026, 10:25 am
பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
June 7, 2026, 4:30 pm
கியூபாவிற்கான தனது சேவைகளைக் காலவரையின்றி நிறுத்துகிறது ஏர் கனடா விமான நிறுவனம்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
