செய்திகள் விளையாட்டு
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
லிஸ்பன்:
கால்பந்து வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் கால்பந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
முதல் முறையாக 48 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன.
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான போர்த்துகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
26 பேர் கொண்ட இந்த அணியில் உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.
41 வயதான அவர் போர்த்துகல் அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.
மேலும் ரொனால்டோ 6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.
இதற்கு முன்பு 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய 5 உலகக் கிண்ண போட்டியில் விளையாடி இருந்தார்.
இதில் அதிகபட்சமாக 2006ல் 4ஆவது இடத்தை போர்த்துகல் அணி பிடித்தது.
கடந்த உலகக் கிண்ண போட்டியில் போர்த்துகல் காலிறுதி வரை வந்து 8ஆவது இடத்தை பிடித்தது.
6ஆவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதன் மூலம் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார்.
லியோனல் மெஸ்சி உள்பட 5 வீரர்கள் 5 உலகக் கிண்ண போட்டியில் விளையாடி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:09 am
30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா சாதனை
May 20, 2026, 10:51 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அர்செனல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது
May 20, 2026, 10:29 am
2026 செபாக் தக்ராவ் உலகக் கோப்பை: சுவடுகள் பதித்த தேசிய அணி
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
