நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா சாதனை

லண்டன்:

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா அணியினர்  சாதனை படைத்துள்ளனர்.

இஸ்தான்புல் அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அஸ்டன்வில்லா அணியினர் எஸ்சி பிராய்பர்க் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன்வில்லா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி பிராய்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை யூரி டைலிமன்ஸ், எமிலியானோ பியூண்டியா, மோர்கன் ரோஜர்ஸ்  ஆகியோர் அடுத்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அஸ்டன் வில்லா அணியினர் ஐரோப்பா லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

மேலும் அஸ்டன் வில்லா அணி தனது 30 ஆண்டு கால கோப்பைக்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது.

சமீப காலங்களில் கான்ஃபரன்ஸ் லீக் அரையிறுதி, சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற பிறகு, 

நிர்வாகி உனேய் எமெரி தனது மூன்றாவது முயற்சியில் ஐரோப்பிய வெற்றியை வில்லா பார்க்கிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset