செய்திகள் மலேசியா
ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்: பிரதமர்
கோலாலம்பூர்:
ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தேசத்தின் ஒழுக்கங்களையும் நாகரிகத்தையும் வடிவமைக்கிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
உலக சவால்கள் மேலும் சிக்கலாகி வருவதால், தார்மீக, ஆன்மீக வலிமை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு பெருகிய முறையில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசிரியர்களின் பங்கு என்பது கல்வி கற்பிப்பது மட்டுமல்ல.
மடானியின் கொள்கைக்கு ஏற்ப, அறிவுக்கு மனித விழுமியங்களையும் ஞானத்தையும் ஊட்டுவதே ஆகும்.
மதிப்புகளும் நற்பண்புகளும் இல்லாமல், வளர்ச்சி என்பது திசை மாறிய முன்னேற்றத்தையே உருவாக்கும் என்று பிரதமர் தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தப் பதிவு வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டின் கருப்பொருள் ஆசிரியர்களே தேசத்தின் இதயம் என்பதாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2026, 12:42 pm
ஆசிரியர்களின் பணியை மேலும் வலுப்படுத்த 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது
May 16, 2026, 12:40 pm
ஆசான் அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஆசிரியர் தின வாழ்த்து
May 15, 2026, 2:42 pm
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
May 15, 2026, 2:40 pm
