செய்திகள் மலேசியா
செனட்டர் நியமனம்; தேசிய முன்னணியில் மஇகா ஓரங்கட்டப்படுவது ஏமாற்றமளிக்கிறது: சிவசுப்பிரமணியம்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் மஇகா தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
மஇகா ஊடகப் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் இதனை கூறினார்.
செனட்டர்கள் நியமனம், அரசு சார்ந்த நிறுவனங்களில் உள்ள பதவிகள் உள்ளிட்ட தேசிய முன்னணியின் பல்வேறு முக்கியக் கருத்தாய்வுகளில், மஇகா புறக்கணிக்கப்படுகிறது.
இது மஇகாவுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
தேசிய முன்னணி தலைவர் மூலம் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
செனட்டர்கள் நியமனம், ஜிஎல்சிகளில் உள்ள பதவிகள் உட்பட பலமுறை மஇகா முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.
ஆனால் இதுவரை மஇகா மூலம் இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கான அர்ப்பணிப்பை உண்மையாகப் பிரதிபலிக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தேசிய முன்னணி அமைச்சர்களால் வழிநடத்தப்படும் அமைச்சகங்களின் கீழ் 200க்கும் மேற்பட்ட ஜிஎல்சி நியமனங்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் மஇகாவுக்கு இன்னும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கூட்டணிக் கட்டமைப்பிற்குள் மஇகாவின் குரலும் கோரிக்கைகளும் உண்மையிலேயே மதிக்கப்படுகின்றனவா என்ற கேள்விகளை இந்த நிலைமை எழுப்புகிறது என்று சுப்ரமணியம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 5:42 pm
பேராக்கில் 300 கடத்தல் அரிசி மூட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்
May 13, 2026, 5:31 pm
பூடி95 குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி
May 13, 2026, 5:30 pm
