செய்திகள் விளையாட்டு
சீ ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்
கோலாலம்பூர்:
நாட்டின் ஆடவர் இரட்டையர் கோ சீ ஃபெய்-நூர் இசூடின் ரும்சானி, இன்று பாங்காக்கின் நிமிபுத்ர் அரங்கில், ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி ஒகாமுரா-கியோஹெய் யமஷிதா ஜோடியை வீழ்த்தியதன் மூலம், தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நாட்டு ஜோடி, 21-15, 17-21, 21-12 என்ற கணக்கில், 56 நிமிடங்கள் நீடித்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன், கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
அந்த வெற்றி, சீ ஃபெய்-நூர் இசூடின் சூப்பர் 500 தரப் போட்டியின் சிறந்த 16 குழுவிற்குள் நுழைவதை உறுதி செய்தது.
நாட்டு ஜோடி, அதன்பின், சீனாவின் ஹுவாங் டி-லியு யாங் ஜோடியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், நாட்டு ஜோடி சலோம்போன் சரோயன்கிடமோர்ன்-வொராபோல் தோங்சா-ஙாவை 21-15, 21-8 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதற்கிடையில், நாட்டின் மற்றொரு ஆடவர் இரட்டையரான சோங் ஹோன் சியான்-வோங் வின் ஷான், தைவானின் லீ ஃபாங்-சிஹ்-லீ ஃபாங்-ஜென் ஜோடியிடம் 20-22, 26-24, 7-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறினர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 11:12 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
May 13, 2026, 11:11 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
May 12, 2026, 5:12 pm
பாங்காக் தகுதிச் சுற்றில் முதல் தடையைத் தாண்டிய ஜீ ஜியா
May 12, 2026, 10:16 am
டெம்பலே தொடர்ந்து இரண்டாவது முறையாக லீக் 1 போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 12, 2026, 10:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் சமநிலை
May 11, 2026, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
May 11, 2026, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை அர்செனல் நெருங்கியுள்ளது
May 10, 2026, 10:17 am
