நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ  ஃபெய்-இசூடின் தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்

கோலாலம்பூர்: 

நாட்டின் ஆடவர் இரட்டையர் கோ சீ ஃபெய்-நூர் இசூடின் ரும்சானி, இன்று பாங்காக்கின் நிமிபுத்ர் அரங்கில், ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி ஒகாமுரா-கியோஹெய் யமஷிதா ஜோடியை வீழ்த்தியதன் மூலம், தாய்லாந்து ஓபனின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நாட்டு ஜோடி, 21-15, 17-21, 21-12 என்ற கணக்கில், 56 நிமிடங்கள் நீடித்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன், கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

அந்த வெற்றி, சீ ஃபெய்-நூர் இசூடின் சூப்பர் 500 தரப் போட்டியின் சிறந்த 16 குழுவிற்குள் நுழைவதை உறுதி செய்தது.

நாட்டு ஜோடி, அதன்பின், சீனாவின் ஹுவாங் டி-லியு யாங் ஜோடியை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், நாட்டு ஜோடி சலோம்போன் சரோயன்கிடமோர்ன்-வொராபோல் தோங்சா-ஙாவை 21-15, 21-8 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

இதற்கிடையில், நாட்டின் மற்றொரு ஆடவர் இரட்டையரான சோங் ஹோன் சியான்-வோங் வின் ஷான், தைவானின் லீ ஃபாங்-சிஹ்-லீ ஃபாங்-ஜென் ஜோடியிடம் 20-22, 26-24, 7-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறினர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset