செய்திகள் இந்தியா
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
கொல்கொத்தா:
முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கடந்த 5ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. எங்கள் வெற்றி களவாடப்பட்டது. முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று வெளியிட்ட உத்தரவில், “மேற்குவங்க சட்டப்பேரவை மே 7-ம் தேதியுடன் கலைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 10:07 pm
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 4, 2026, 12:55 pm
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
June 3, 2026, 3:50 pm
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா
May 27, 2026, 2:11 pm
