செய்திகள் இந்தியா
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கைப் பணம் திருடப்படுவதாக துறவிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராமர் கோயில் காணிக்கை பணம் எண்ணும் குழு உறுப்பினர் மஹிபால் சிங், பல குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ராமர் கோயிலில் பணம் எண்ணும் போது பெட்டியில் 10 கட்டுகள் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் உண்மையில் 13 கட்டுகளைப் பெட்டியில் வைத்திருந்தனர். இந்த முரண்பாட்டை உணர்ந்து, பெட்டியில் இருந்த கட்டுகளைச் சரி பார்த்த போது 10 இருக்க வேண்டிய இடத்தில் 13 பணக்கட்டுகள் இருந்தன.
இது எவ்வளவு காலமாக நடைபெறுகிறது என்பதை விசாரிக்க, ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். பின்னர், நன்கொடைகளைச் சரி பார்த்து எண்ணுவதற்காக மேலும் 2 பேர் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகும் குறைகள் சரிசெய்யப்படவில்லை. ஆனால், என்னைப் பணியில் இருந்து நீக்கிவிட்டனர்’’ என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இணைத்து சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் வெளியிட்ட பதிவில், ‘‘இன்று உலகம் அறிந்து கொண்ட இந்தச் செய்தி, உண்மையில் மிகவும் பழையது.
‘ட்ரஸ்ட்’ (அறக்கட்டளை) என்றால் நம்பிக்கை. இந்த விவகாரத்தை அறக்கட்டளையே தீவிரமாக எடுத்துக் கொண்டு, நீதித் துறை விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். அரசு ஏன் மவுனம் காக்கிறது? விசாரணை கோரிக்கையைக் கண்டு முக்கியப் புள்ளிகள் அஞ்சுகிறார்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமர் கோயில் வளாகத்தில் உள்ள 15 கோயில்களில் 44 காணிக்கை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, அறக்கட்டளையின் 2 அலுவலகங்களிலும் நன்கொடை வசூலித்து ரசீதுகள் வழங்கப்படுகின்றன.
பல ஆண்டுகளாக கொள்ளைபோகும் பணத்தை யோகியின் உத்தரபிரதேச அரசு ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
July 28, 2026, 12:26 pm
