செய்திகள் கலைகள்
படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்: வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்
மும்பை:
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம் இந்த அளவுக்கு அதிக வசூலைக் கொடுத்த பிறகும் ரன்வீர் சிங் புதிய படம் எதிலும் பங்கேற்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
அதோடு ரன்வீர் சிங் இப்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் தனது மகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ரன்வீர் சிங் மனைவியான நடிகை தீபிகா படுகோனே தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் கிங் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார்.
கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொழிலில் ஆதரவாக இருப்பது குறித்து பாலிவுட்டில் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தீபிகா படுகோனே சமீபத்தில்தான் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்படி இருந்தும் ஷாருக்கான் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 11:49 am
ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி
May 5, 2026, 9:43 pm
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி காலமானார்
May 4, 2026, 4:05 pm
பன்முகக் கலைஞர் ஜலீல் ஹமிட் காலமானார்
April 30, 2026, 4:09 pm
திரையுலக ஜாம்பவான் மரியா மெனாடோ காலமானார்
April 28, 2026, 12:39 pm
சாய் பல்லவிதான் சிறந்த நடிகை: ஆமீர் கான் உரை இணையத்தில் வைரல்
April 27, 2026, 5:27 pm
‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா: த்ரிஷாவைத்தவிர அனைவரும் கலந்துகொண்டனர்
April 22, 2026, 1:03 pm
விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை: சவாலான கதாபாத்திரங்களைத் தேடும் நடிகர் இர்ஃபான் ஜைனி
April 19, 2026, 8:24 pm
