நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஆர். பி. சவுத்ரிக்கு திரைத்துறையினர் புகழஞ்சலி

சென்னை:

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் ஆர்.பி.சவுத்ரி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

தென்னிந்திய தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களின் சிகரமாக திகழ்ந்தவர். சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சரணாலயமாய் இருந்தவர் என்று  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

அவரது உடலுக்கு திரைத்துறையினர் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்த வந்திருந்தோர் அவரது மகன் நடிகர் ஜீவாவுக்கும்  குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset