செய்திகள் விளையாட்டு
20 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அர்செனல்
லண்டன்:
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய சாம்பியன் இறுதியாட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறியுள்ள்ளனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோலை புகாயோ சகா அடித்தார்.
இரு ஆட்டங்களின் முடிவில் அர்செனல் அணியினர் 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து அர்செனல் அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
குறிப்பாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அர்செனல் அணி அதன் முதல் சாம்பியன் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 9:20 am
உலகக் கிண்ண போட்டிக்கான பிபாவின் உத்தரவாதத்தை ஈரான் கோருகிறது
May 5, 2026, 9:42 am
செல்சி கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சாதனையைப் பதிவு செய்தது
May 3, 2026, 9:15 am
ஐபிஎல் 2026: மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
May 3, 2026, 8:54 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
May 3, 2026, 8:49 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
May 2, 2026, 10:49 am
