செய்திகள் இந்தியா
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்: இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள் அறிவிப்பு
புது டெல்லி:
கிரெடிட் காா்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த, நிா்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகு 3 நாள்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானாலும் வங்கிகள் அபராதம் வசூலித்து வருகின்றன. ஆனால் புதிய விதியின்படி, நிா்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 3 நாள்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும்.
இந்த 3 நாள்களுக்குள் தொகையைச் செலுத்தினால், கூடுதல் அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கிய மாற்றமாக, அபராதக் கட்டணத்தை கணக்கிடும் முறையில் சீா்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த நிலுவைத் தொகையின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி கடைசி தேதிக்கு முன்னதாக வாடிக்கையாளா் ஒரு பகுதியைச் செலுத்தியிருந்தால், மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:54 am
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
April 28, 2026, 2:45 pm
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
April 27, 2026, 6:32 pm
