செய்திகள் இந்தியா
பாஜகவினர் மேற்கு வங்கத்தில் அட்டூழியம் புரிகின்றனர்; என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா:
பாஜக சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று (ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கு இன்றுதான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர், பாஜகவினர் மீது மம்தா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
"எனது கட்சியும் நானும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் மேற்கு வங்கம் பற்றிய புரிதல் இல்லாத தேர்தல் அதிகாரிகள் பலர் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
நான் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். திரிணமூல் காங்கிரஸ் முகவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறார். திரிணமூல் காங்கிரஸை குறிவைக்கிறார்கள். இன்று காலையில் எனது கட்சியின் இளைஞரணித் தலைவர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். அதனால்தான், நான் சேத்லா பகுதிக்குச் சென்றேன். நான் காவல் நிலையத்திற்குச் செல்லவில்லை. எனது கட்சித் தொண்டர் ஒருவரே அங்கு சென்றார்.
நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 'குண்டர்கள்', மன்னிக்கவும், சிஆர்பிஎஃப் படையினர், உள்ளூர் காவல்துறையினரின் அனுமதியின்றி எனது தொகுதி 70-வது வார்டு கவுன்சிலரின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீட்டில் இல்லை என்று கூறியபோதும், அந்த சிஆர்பிஎஃப் படையினர் அவர்களை காலால் எட்டி உதைத்தனர். அவர்களிடமிருந்த போனையும் பறித்துக்கொண்டனர். அவர் எந்தவொரு கட்சிப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதற்கான ஆதாரத்தை என்னால் காட்ட முடியும்" என்று கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
April 28, 2026, 2:45 pm
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 5:20 pm
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
April 27, 2026, 3:17 pm
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
April 26, 2026, 10:20 pm
