செய்திகள் இந்தியா
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
புது டெல்லி:
தனது 18 மாத மகளை பெரிய வடிகாலில் (ஆழமான திறந்த நீர் வடிகால்) உயிருடன் தூக்கி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தக் கொடூரமான செயல், தீவிர வறுமையின் அழுத்தத்தால் தூண்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, பல்லா பகுதியில் உள்ள ஒரு பெரிய வடிகாலின் இரும்புக் கம்பிகளில் அந்த ஏழைக் குழந்தையின் சடலம் சிக்கியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் அம்பலமானது.
இரண்டு பள்ளி மாணவர்களால் பாதிக்கப்பட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், போலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன், அவர்கள் கிராம மக்களுக்குத் தெரிவித்தார்கள்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த பெரிய வடிகாலில் தூக்கி எறியப்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தை இன்னும் உயிருடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஒரு பெண், ஒரு குழந்தையைத் தூக்கிச் செல்வதையும், சிறிது நேரத்தில் அங்கிருந்து தனியாகத் திரும்புவதையும் காட்டும் சிசிடிவி காட்சிகள் கிடைத்ததாக போலிஸார் கூறினர்.
அந்தப் பதிவுகளின் அடிப்படையில், மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
மதுபானியைச் சேர்ந்த நீலம் என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், விசாரணையின் போது, அந்தச் செயலைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர், தனது கணவர் சஞ்சயுடன் ஃபரிதாபாத்தில் வசித்து வந்தார்.
ஒரு மூத்த விசாரணை அதிகாரி, கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளே தனது செயலுக்குக் காரணம் என்று சந்தேக நபர் கூறியதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஆறு சகோதரிகளில் கடைசிக் குழந்தை ஆவார். மிகவும் குறைந்த வருமானத்தில், தனது குழந்தைகள் அனைவரையும் வளர்க்க முடியாது என்று சந்தேக நபர் கூறினார்.
தீராஜ் நகரில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் அந்தக் குடும்பம் வசித்து வருவதாகவும், அவர்கள் மோசமான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் போலிஸ் மூலங்கள் தெரிவித்தன.
வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், சம்பவத்தின் முழுப் படத்தைப் பெறுவதற்காக, தங்கள் விசாரணைக் கோப்புகளை நிறைவு செய்து வருவதாகவும் போலிஸ் செய்தித் தொடர்பாளர் யஷ்பால் உறுதிப்படுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
