செய்திகள் இந்தியா
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சங்கரப்பள்ளி பகுதியில், கோழி குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி குழம்பை சமைக்கும்படி தனது மனைவி லட்சுமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அன்று லட்சுமி கோழி குழம்பு சமைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பொறுமையிழந்த லட்சுமி, அருகில் இருந்த அரிவாளை எடுத்துத் தனது கணவரை ஆவேசமாக வெட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், தலைமறைவாக இருந்த லட்சுமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சிறு குழம்பு சமைக்காத விவகாரம், குடும்பத்தில் கொலையில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
