செய்திகள் இந்தியா
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
ஹைதராபாத்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சங்கரப்பள்ளி பகுதியில், கோழி குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர் ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி குழம்பை சமைக்கும்படி தனது மனைவி லட்சுமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அன்று லட்சுமி கோழி குழம்பு சமைக்காததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பொறுமையிழந்த லட்சுமி, அருகில் இருந்த அரிவாளை எடுத்துத் தனது கணவரை ஆவேசமாக வெட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், தலைமறைவாக இருந்த லட்சுமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சிறு குழம்பு சமைக்காத விவகாரம், குடும்பத்தில் கொலையில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 2:45 pm
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 5:20 pm
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
April 27, 2026, 3:17 pm
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
