நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்

புதுடெல்லி:

புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த சுவிஸ் International விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றால் நிறுத்தப்பட்டது. 

ஸூரிக் (Zurich) நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான்கு பயணிகளுக்கும் ஒரு விமானச் சிப்பந்திக்கும் காயம் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. முன்பு 6 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் இயந்திரம் தீப்பிடித்ததாக Economic Times நாளேடு தெரிவித்தது. 

பயணிகளை அவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றியபோது அவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாக அது சொன்னது. சம்பவத்தை விசாரிக்கப் பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது. 

காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானச் சிப்பந்தி ஒருவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 228 பயணிகள், 4 குழந்தைகள், 12 விமானச் சிப்பந்திகள் இருந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset