செய்திகள் இந்தியா
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
புதுடெல்லி:
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த சுவிஸ் International விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றால் நிறுத்தப்பட்டது.
ஸூரிக் (Zurich) நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான்கு பயணிகளுக்கும் ஒரு விமானச் சிப்பந்திக்கும் காயம் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. முன்பு 6 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் இயந்திரம் தீப்பிடித்ததாக Economic Times நாளேடு தெரிவித்தது.
பயணிகளை அவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றியபோது அவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாக அது சொன்னது. சம்பவத்தை விசாரிக்கப் பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது.
காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விமானச் சிப்பந்தி ஒருவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 228 பயணிகள், 4 குழந்தைகள், 12 விமானச் சிப்பந்திகள் இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 3:17 pm
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
