செய்திகள் மலேசியா
உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் மலேசியா தனது மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
புத்ராஜெயா:
அதிகரித்து வரும் உலகளாவிய செலவுகள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள மலேசியா தனது மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
வரும் மாதங்களுக்கு நாட்டில் போதுமான பெட்ரோலிய விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் டீசல் பற்றாக்குறை, உர விநியோகப் பிரச்சினைகள் போன்ற சவால்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதிகரித்து வரும் செலவுகள், ஏற்படக்கூடிய விநியோகப் பற்றாக்குறைகள் காரணமாக, இந்தப் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த, மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வலுவான உறுதிப்பாடு தேவை.
அடுத்த சில மாதங்களுக்கு எங்களுக்குப் போதுமான பெட்ரோலிய விநியோகத்திற்கு உத்தரவாதம் இருப்பதால் மலேசியா அதிர்ஷ்டசாலி நாடாகும்.
ஆனால் டீசல், உர விநியோகம் தொடர்பான கூடுதல் சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்
April 27, 2026, 11:02 am
அதிகாலைச் சோதனையில் சிக்கிய பந்தயக் கும்பல்: 16 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் அதிரடியாக கைது
April 27, 2026, 10:45 am
பழைய பகையால் வந்த வினை: நடுரோட்டில் ஆடவர் மீது தாக்குதல்
April 27, 2026, 10:29 am
