செய்திகள் இந்தியா
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
புதுடெல்லி:
இந்தியத் தலைநகர் டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 42.8 டிகிரி செல்சியஸ் (109.04 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நகரின் பல பகுதிகளில் 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு ‘வெப்ப அலை நீண்டகால திட்டம் 2026’-ஐ ஆய்வு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளில் குளிர்ச்சியான அறைகள், கூடுதல் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க தானியங்கி குடிநீர் இயந்திரங்கள், தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டும் ‘வாட்டர் பெல்’ முறை அமல்படுத்தப்பட உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மதிய நேரங்களில் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும், தொழிலாளர்களுக்கு முறையான நிழற்குடை வசதிகள், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க, பேரிடர் மேலாண்மை ஆணையம் வானிலை மையத்துடன் இணைந்து உடனுக்குடன் தகவல்களைப் பகிரத் திட்டமிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
