நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

230 மில்லியன் ரிங்கிட் கையாடல் வழக்கு: 18.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை எம்ஏசிசி பறிமுதல் செய்தது

புத்ராஜெயா:

ஒரு அரசு சாரா அமைப்பு சம்பந்தப்பட்ட 230 மில்லியன் ரிங்கிட் நிதி கையாடல் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 18.3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.

பல்வேறு இடங்களில் அமைந்துள்ள ஏழு குடியிருப்புகள், மூன்று அலுவலக இடங்கள், நான்கு நிலப் பகுதிகள் அடங்கிய 14 சொத்துக்கள் இந்தப் பறிமுதலில் சம்பந்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையக் குழு இன்று பல சோதனைகளில் இந்தப் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 18.36 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று இங்குள்ள ஒரு வட்டாரம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset