செய்திகள் மலேசியா
சிக்கலில் உள்ள 178 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் அணுகுமுறையை அரசு கையாள்கிறது: பாப்பாராயுடு
ஷாஆலம்:
மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத ஆலய பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு தீர்வைக் காண்பதற்காக, சிலாங்கூர் அரசு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தி ஒரு அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு இதனை கூறினார்.
தற்போது முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான 178 வழக்குகள் தனது கட்சிக்கு வந்துள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் விவேகத்துடன் தீர்க்கப்படும்.
தற்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப, இப்பிரச்சினையைக் கையாள்வதற்காக மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் நிலப் பயன்பாடு குறைவாக இருப்பதால், இடத்திற்கு இடம் மாற்றுத் தீர்வைச் செயல்படுத்த முடியாது.
மாற்று நிலம் வேண்டுமென்றால், வழிபாட்டுக் தளங்களையும் கோயிலையும் இடம் மாற்றுவதற்கு
சிலாங்கூரில் நிலம் கிடைக்காது. இடத்திற்கு இடம் மாற்ற வேண்டுமென்றால், அதுவும் கிடைக்காது. அது நடக்காது.
ஆனால், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு, சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, இந்தப் பிரச்சினையைக் குறைத்து, ஒரு பெரிய கோவிலை வழங்குவதற்கான ஒரு திட்டமும் என்னிடம் உள்ளது என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 5:19 pm
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை; முர்ஷிதாபாத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
April 23, 2026, 4:35 pm
வட மண்டல ஒருமைப்பாட்டு வாரம் 2026: அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் துணையமைச்சர் யுனேஸ்வரன்
April 23, 2026, 3:35 pm
மெக்ஸ் நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: எதிர்திசையில் வந்த காரால் வங்காளதேசப் பயணி பலி
April 23, 2026, 12:38 pm
