செய்திகள் இந்தியா
பள்ளிக் குழந்தைகளை காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்க்கு கிராம மக்கள் அஞ்சலி
கௌஹாத்தி:
தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் அடிக்கடி செய்தி வருகின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டால், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளது.
இந்நிலையில் தெருநாய் ஒன்று விஷ பாம்புடன் போராடி பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மயூர்பன்ச் மாவட்டத்தில், திராகுலா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பாலர் பள்ளியில் 30 குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்ததும் அந்த தெருவில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்டையிட்டது. இதனால் அந்த பாம்பு சீற்றத்துடன் நாயை பலமுறை கொத்தியது. முகத்திலும், வாயிலும் பாம்பு கொத்தியதையும் பொருட்படுத்தாமல் காளி முழு மூச்சூடன் சண்டையிட்டு பாம்பை கடித்து கொன்றது.
ஆனால் பாம்பின் விஷம் உடலில் ஏறியதால், சிறிது நேரத்தில் அந்த நாய் மயங்கி விழுந்து இறந்தது.
வீரத்துடன் போராடி தங்களின் குழந்தைகளை காப்பாற்றிய காளிக்கு கிராம மக்கள் வெள்ளைத் துணி போர்த்தி, மலர் மாலைகளால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
