நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி

கௌஹாத்தி:

தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த அரசு நடவடிக்கை மேற்​கொண்​டால், விலங்கு நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இப்​பிரச்​சினை இந்தியா முழு​வதும் உள்​ளது.

இந்​நிலை​யில் தெரு​நாய் ஒன்று விஷ பாம்​புடன் போராடி பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்​றிய சம்​பவம் ஒடி​சா​வில் நடை​பெற்​றுள்​ளது. அங்​குள்ள மயூர்​பன்ச் மாவட்​டத்​தில், திராகுலா என்ற கிராமம் உள்​ளது. இங்​குள்ள பாலர் பள்​ளி​யில் 30 குழந்​தைகள் படிக்​கின்​றனர். 

இந்​நிலை​யில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்​தது. இதை பார்த்​ததும் அந்த தெரு​வில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்​டை​யிட்​டது. இதனால் அந்த பாம்பு சீற்​றத்​துடன் நாயை பலமுறை கொத்​தி​யது. முகத்​தி​லும், வாயிலும் பாம்பு கொத்​தி​யதை​யும் பொருட்​படுத்​தாமல் காளி முழு மூச்​சூடன் சண்​டை​யிட்டு பாம்பை கடித்து கொன்​றது.

ஆனால் பாம்​பின் விஷம் உடலில் ஏறிய​தால், சிறிது நேரத்​தில் அந்த நாய் மயங்கி விழுந்து இறந்​தது. 

வீரத்​துடன் போராடி தங்​களின் குழந்​தைகளை காப்​பாற்​றிய காளிக்கு கிராம மக்​கள் வெள்​ளைத் துணி போர்த்​தி, மலர் மாலைகளால் அலங்​கரித்து அஞ்​சலி செலுத்​தினர். இச்​சம்​பவம்​ சமூக ஊடகங்​களில்​ வேக​மாக பரவி வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset