செய்திகள் இந்தியா
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
பெங்களூரு:
தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த இரண்டாவது விபத்து இதுவாகும். திருச்சூர் மாவட்டப் போலிஸ் கண்காணிப்பாளர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் இது குறித்துக் கூறுகையில், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்த 15 பேரில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவிழாக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் ஆறு பேரின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், அவர்களின் அடையாளத்தைக் கண்டறிய டி.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கேரளாவிலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததே இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த மாதமும் மேற்கு இந்தியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய விபத்துகள், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
