நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது

பெங்களூரு:

பெங்களூருவில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சாரத் தொழிலை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். 

நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய இடைத்தரகர்கள், உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் (HSR Layout), வர்த்தூர் (Varthur) ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் மையங்கள், ஒரு தனியார் வீட்டை மையமாகக் கொண்டு இந்த சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளிகள் சமூக வலைதளங்கள், கைப்பேசி வாயிலாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, ஸ்பா சிகிச்சைகள் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். 

சோதனையின் போது அங்கிருந்த ரொக்கப் பணம், பல கைப்பேசிகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற உரிமம் பெறாத, சட்டவிரோத மசாஜ் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset