செய்திகள் இந்தியா
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 16 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தந்தை விஜய் குமார் சௌபே (34), அவரது உதவியாளர் அப்துல் மன்னான் (45) ஆகியோர் திங்கட்கிழமை கோண்டா பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஒரு கெளரவக் கொலையாக இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.
போலிசார் தெரிவித்ததாவது, வயதில் மூத்த ஒருவருடன் இளம்பெண் தொடர்பில் இருந்தது தந்தைக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர், அடுத்த நாள் பராபங்கி மாவட்டம் பட்துபூர் அருகே, கார் உள்ளேயே அவளை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றத்தை மறைக்க முயன்றதாகவும், இளம்பெண்ணின் முகத்தை கழிப்பறை சுத்திகரிப்பு திரவத்தை பயன்படுத்தி சேதப்படுத்த முயன்றதாகவும் போலிசார் தெரிவித்தனர். ஆனால், அது பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தின் முழு பின்னணியையும் வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
