செய்திகள் இந்தியா
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 16 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தந்தை விஜய் குமார் சௌபே (34), அவரது உதவியாளர் அப்துல் மன்னான் (45) ஆகியோர் திங்கட்கிழமை கோண்டா பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஒரு கெளரவக் கொலையாக இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.
போலிசார் தெரிவித்ததாவது, வயதில் மூத்த ஒருவருடன் இளம்பெண் தொடர்பில் இருந்தது தந்தைக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர், அடுத்த நாள் பராபங்கி மாவட்டம் பட்துபூர் அருகே, கார் உள்ளேயே அவளை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றத்தை மறைக்க முயன்றதாகவும், இளம்பெண்ணின் முகத்தை கழிப்பறை சுத்திகரிப்பு திரவத்தை பயன்படுத்தி சேதப்படுத்த முயன்றதாகவும் போலிசார் தெரிவித்தனர். ஆனால், அது பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தின் முழு பின்னணியையும் வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
