செய்திகள் இந்தியா
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 16 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தந்தை விஜய் குமார் சௌபே (34), அவரது உதவியாளர் அப்துல் மன்னான் (45) ஆகியோர் திங்கட்கிழமை கோண்டா பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஒரு கெளரவக் கொலையாக இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.
போலிசார் தெரிவித்ததாவது, வயதில் மூத்த ஒருவருடன் இளம்பெண் தொடர்பில் இருந்தது தந்தைக்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர், அடுத்த நாள் பராபங்கி மாவட்டம் பட்துபூர் அருகே, கார் உள்ளேயே அவளை நெரித்துக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றத்தை மறைக்க முயன்றதாகவும், இளம்பெண்ணின் முகத்தை கழிப்பறை சுத்திகரிப்பு திரவத்தை பயன்படுத்தி சேதப்படுத்த முயன்றதாகவும் போலிசார் தெரிவித்தனர். ஆனால், அது பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தின் முழு பின்னணியையும் வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
