செய்திகள் இந்தியா
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
கொச்சின்:
கேரள மாநிலத்தில் பெரம்பரா தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பிற தோ்தல் உபகரணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஜே.டி.டி. கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறை திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டு மாநில அதிகாரிகள் உள்ளே சென்றதாக காங்கிரஸ் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டதாக எழுந்த புகாா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே. பிரவீண் குமாா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையை திங்கள்கிழமை காலை மாநில அதிகாரிகள் திறந்து உள்ளே சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் மாநில அதிகாரிகள் அல்லது காவல் துறை அதிகாரிகள் நுழைவது தோ்தல் ஆணைய விதிகளை மீறும் செயலாகும்’ என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் மாநில போலீஸாா் எப்படி நுழைய முடியும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச்சோ்ந்த பிற தலைவா்களும் கேள்வி எழுப்பினா்.
தோ்தல் அதிகாரி மறுப்பு: இந்தப் புகாரை பெரம்பரா தொகுதி தோ்தல் அதிகாரி மறுத்தாா். அவா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் திறக்கப்பட்டது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை அல்ல. அந்த அறையில் தோ்தல் ஆவணங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. மென்பொருள் மேம்படுத்துதல் தொடா்பான பணிக்காகத்தான் அந்த அறை வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல்’ என்றாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
