செய்திகள் இந்தியா
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
அமராவதி:
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, 17 வயது இளைஞரை அவரது சொந்த மாமாவே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட இளைஞரைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், பீர் பாட்டில்கள், சிமெண்ட் கற்களைக் கொண்டு அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலிசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், தலைமறைவாக இருந்த அந்த நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிலவிய இந்தத் தகராறு கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 4:55 pm
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
April 19, 2026, 11:17 am
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
April 18, 2026, 5:15 pm
மாணவியின் பலிக்கு 'பகடிவதை' காரணமா?: கதறும் தாயின் வாக்குமூலம்
April 18, 2026, 5:10 pm
கடனை திருப்பிக் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த கதி: ஆத்திரத்தில் காதை கடித்துக் குதறிய பெண்
April 18, 2026, 5:06 pm
காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலி
April 18, 2026, 7:21 am
இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி
April 17, 2026, 5:54 pm
