செய்திகள் இந்தியா
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
அமராவதி:
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, 17 வயது இளைஞரை அவரது சொந்த மாமாவே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட இளைஞரைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், பீர் பாட்டில்கள், சிமெண்ட் கற்களைக் கொண்டு அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலிசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், தலைமறைவாக இருந்த அந்த நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிலவிய இந்தத் தகராறு கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
