செய்திகள் இந்தியா
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
அமராவதி:
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியுடன் தவறான உறவு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, 17 வயது இளைஞரை அவரது சொந்த மாமாவே கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட இளைஞரைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், பீர் பாட்டில்கள், சிமெண்ட் கற்களைக் கொண்டு அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலிசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிசார், தலைமறைவாக இருந்த அந்த நபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நிலவிய இந்தத் தகராறு கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 11:29 am
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 14, 2026, 3:16 pm
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
May 14, 2026, 10:48 am
இந்தியாவின் மணிப்பூரில் இன வன்முறையில் மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்தனர்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
