செய்திகள் இந்தியா
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் புதிய வரி விதிப்பு: டெல்லி மாநகராட்சியின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை
டெல்லி:
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வணிக வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் வரியை 53 விழுக்காடு வரை உயர்த்துவதாகத் டெல்லி மாநகராட்சி (MCD) அறிவித்துள்ளது.
இந்த வரி உயர்வு, மாநகராட்சிப் பகுதிக்குள் நுழையும் இலகுரக, கனரக வணிக வாகனங்களுக்குப் பொருந்தும். டெல்லியில் நிலவும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தவும், வாகனப் போக்குவரத்தைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, வாகனங்களின் அளவு, எடைக்கு ஏற்ப இந்த வரி வசூலிக்கப்படும். குறிப்பாக, வெளி மாநிலங்களிலிருந்து டெல்லிக்குள் நுழையும் வணிக வாகனங்கள் இனி கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
அதேவேளையில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இந்த வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி உயர்வு வரும் வாரங்களில் உடனடியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் வரியிலிருந்து திரட்டப்படும் நிதி, டெல்லியில் பசுமைப் போர்வையை விரிவுபடுத்தவும், காற்றுத் தூய்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, நகரத்திற்குள் நுழையும் பழைய, அதிகப் புகையை வெளியேற்றும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 11:29 am
இந்தியாவில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
May 14, 2026, 3:16 pm
கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு
May 14, 2026, 10:48 am
இந்தியாவின் மணிப்பூரில் இன வன்முறையில் மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்தனர்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
