செய்திகள் இந்தியா
காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலி
ஆக்ரா:
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு விடுதி அறையில், 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது காதலனைச் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையைச் செய்த பிறகு, அந்தப் பெண் விடுதி ஊழியர்களிடம் சென்று தானே கொலை செய்ததாகத் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட நபர், அந்தப் பெண் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று விடுதி அறையில் தங்கியிருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து அந்த நபரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அந்த நபர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு எவ்விதப் பதற்றமும் இன்றி விடுதியின் வரவேற்பு அறைக்குச் சென்ற அந்தப் பெண், "நான் அவனைக் கொன்றுவிட்டேன்" என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே நிலவி வந்த தனிப்பட்ட விரோதம் அல்லது திருமண விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
