செய்திகள் உலகம்
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்
வாஷிங்டன்:
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஃபிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி அமெரிக்காவும், ஈரானும் இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தன.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது: ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் அங்கு செல்லக்கூடும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
இஸ்ரேல் மீது 56 ராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு
April 17, 2026, 11:17 am
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஓநாய் மீட்புப் பணி முடிவுக்கு வந்தது
April 17, 2026, 10:11 am
போலந்து தலைநகரில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ: காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கும் ரோபோ
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
