செய்திகள் உலகம்
தாய்லாந்தில் உலகின் மிகப் பெரிய தண்ணீர் திருவிழாவின்போது 3 நாளில் விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு
பேங்காக்:
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தண்ணீர் திருவிழாவின்போது சாலை விபத்துகளில் சிக்கி கடந்த 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாய் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை, விருந்துகளுடன் கொண்டாடப்படுகின்றன. சோங்க்ரான் நீர் திருவிழாவின்போது, பழையன கழித்து விட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்தத் திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தத் தண்ணீர் திருவிழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க வரும்போது 3 நாளில் சுமார் 951 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 191 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 911 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:29 pm
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
இஸ்ரேல் மீது 56 ராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு
April 17, 2026, 11:17 am
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஓநாய் மீட்புப் பணி முடிவுக்கு வந்தது
April 17, 2026, 10:11 am
போலந்து தலைநகரில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ: காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கும் ரோபோ
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
