செய்திகள் உலகம்
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததை மீட்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களுக்கு இடையே சிலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நூர்ராச்மன் கிந்தா த்ராதிஸ்யா தெரிவித்தார்.
நேற்று காலை 7.34 மணியளவில் மெலாவியிலிருந்து, குபு ராயா நோக்கிப் புறப்பட்ட 'PK-CFX' ரக ஹெலிகாப்டர், காலை 8.10 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டது.
ற்று தொடங்கப்பட்ட மீட்புப் பணிகள் இன்று காலையும் நீடித்த நிலையில், சிதைந்த ஹெலிகாப்டர் பாகங்களுக்குள் சிக்கியிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியேற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தேடுதல், மீட்புப் பணியில் (SAR) சுமார் 20 மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இந்தோனேசிய விமானப்படையின் ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:30 am
இஸ்ரேல் மீது 56 ராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு
April 17, 2026, 11:17 am
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த ஓநாய் மீட்புப் பணி முடிவுக்கு வந்தது
April 17, 2026, 10:11 am
போலந்து தலைநகரில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ: காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்கும் ரோபோ
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
