செய்திகள் இந்தியா
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு இந்திய அரசு விளம்பரம்
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக இந்திய கலாசாரத் துறை ரூ. 76 லட்சம் செலவிட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக மத்திய அரசு எவ்வளவு செலவிட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய கலாசார அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கலாச்சார அமைச்சகத்தால் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ. 76,13,129 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலாசார அமைச்சகம் அளித்த பதிலின் நகல் இணையத்தில் பகிரப்பட்டு, “அரசு சாராத தனியார் அமைப்பின் விழாவின் விளம்பரத்துக்கு மத்திய அரசு செலவிட்டது ஏன்?” என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
சுதந்திர இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூன்று முறை தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
