செய்திகள் இந்தியா
"மனிதாபிமானம் எங்கே?”: குழந்தைகளைக் கைவிடுவதில் 5-ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் மத்தியப் பிரதேசம்
போபால்:
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில், மத்தியப் பிரதேச மாநிலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குப்பைத் தொட்டிகள், பேருந்துகள், அடர்ந்த காட்டுப் பகுதிகள் எனப் பாதுகாப்பற்ற இடங்களில் பச்சிளம் உயிர்கள் வீசப்படும் கொடுமை அந்த மாநிலத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்தாண்டு காலத் தரவுகளின்படி, பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தைகள் முதல் சில மாதக் குழந்தைகள் வரை பலமுறை கைவிடப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலான குழந்தைகள் முறையற்ற உறவு அல்லது வறுமை காரணமாகப் பெற்றோர்களால் கைவிடப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகள் அதிகளவில் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவது சமூகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மத்தியப் பிரதேச அரசு, காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
குழந்தைகள் நலக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இது குறித்துக் கூறுகையில், குழந்தைகளை வளர்க்க இயலாதவர்கள் அவர்களைக் காப்பகங்களில் ஒப்படைக்க முன்வர வேண்டுமே தவிர, வீதிகளில் வீசிச் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மத்தியப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களை விடப் பலமடங்கு அதிகமாக உள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற செயல்களைத் தடுக்க இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கை, சமூக விழிப்புணர்வு அவசியம் என்பதே தற்போதைய சூழலில் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
