செய்திகள் இந்தியா
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கோயம்புத்தூர்:
கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
உயிரிழந்த மாணவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வணிக வளாகத்தின் மேல் தளத்திற்குச் சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென கீழே குதித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பப் பிரச்சனையா அல்லது கல்வி ரீதியான மன அழுத்தமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மாணவரின் கைபேசி, தற்கொலைக்கு முன் அவர் யாருடனாவது பேசினாரா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் சூழலில் இருப்பவர்கள் உரிய மனநல ஆலோசனை பெற வேண்டும் என்று காவல்துறையினரும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 10:17 am
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
April 12, 2026, 5:13 pm
