செய்திகள் இந்தியா
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கோயம்புத்தூர்:
கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
உயிரிழந்த மாணவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வணிக வளாகத்தின் மேல் தளத்திற்குச் சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென கீழே குதித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பப் பிரச்சனையா அல்லது கல்வி ரீதியான மன அழுத்தமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மாணவரின் கைபேசி, தற்கொலைக்கு முன் அவர் யாருடனாவது பேசினாரா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் சூழலில் இருப்பவர்கள் உரிய மனநல ஆலோசனை பெற வேண்டும் என்று காவல்துறையினரும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
