செய்திகள் இந்தியா
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
ஆக்ரா:
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பணியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் காவலர் ஒருவர், தான் இறந்துவிட்டதாக உலகத்தை நம்பவைக்க அப்பாவி பிச்சைக்காரர் ஒருவரைக் கொலை செய்து, அவரது உடலை எரித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தன் மீதான குற்றச்சாட்டை தவிர்க்கவும் இந்தச் சினிமா பாணி நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளது போலிஸ் விசாரணையில் அம்பலமானது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் காவலர், ஒரு பிச்சைக்காரரை நயவஞ்சகமாக அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். பின்னர், அந்த உடலை அடையாளம் காண முடியாத அளவிற்கு எரித்துவிட்டு, தனது அடையாள அட்டைகள், பொருட்களை அந்தச் சடலத்தின் அருகே போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதனைப் பார்த்த உள்ளூர் மக்களும், போலிசாரும், ஆரம்பத்தில் அந்தக் காவலர்தான் இறந்துவிட்டதாகக் கருதினர்.
இருப்பினும், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நிலவிய சில சந்தேகத்திற்கிடமான சூழல்கள், உடற்கூறாய்வு முடிவுகள் போலிசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்திய போலிசார், உயிருடன் மறைந்திருந்த அந்த முன்னாள் காவலரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது, தன் மீதான பழைய குற்ற வழக்குகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கவே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
கைதான அவர் மீது தற்போது கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
