நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் அரையிறுதியாட்டத்தில் அர்செனல், பாயர்ன் முனிச்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு அர்செனல், பாயர்ன் முனிச் அணிகள் முன்னேறியுள்ளன.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஸ்போர்டிங் சிபி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் முடிவுற்றது.

இரு ஆட்டங்களின் முடிவில் 1-0 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணியினர் அடுத்த சுற்றிக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 6-4 என்ற மொத்த கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதை தொடர்ந்து பாயர்ன் முனிச் அணியினர் சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ரியல்மாட்ரிட் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset