நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4,165 மாணவர்கள் உயர் கல்வி 5.0 நிதி உதவியைப் பெறுகின்றனர்: மித்ரா கட்டம் கட்டமாக நிதியை விநியோகிக்கத் தொடங்கியது

புத்ராஜெயா:

அரசு கல்விச்சாலைகளிலும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மொத்தம் 4,165 இந்திய மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, உயர் கல்வி 5.0 திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அதிகாரப்பூர்வமாக மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா, அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதி விநியோகத்தை கடந்த 9 ஏப்ரல் 2026 முதல் கட்டம் கட்டமாகத் தொடங்கியுள்ளது. 

உதவித் தொகை பெறும் மாணவர்களின் முழுப் பட்டியல் இன்று, 14 ஏப்ரல் 2026 முதல் மித்ராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிவேற்றப்படும்.

மனிதவள அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க, மித்ரா தற்போது அதன் புதிய தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 

இவர் கடந்த 24 மார்ச் 2026 அன்று தனது பணியில் இணைந்தார். இதற்கேற்ப, மித்ராவின் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் சீரமைக்கப்பட்டு, முறையான நிர்வாக விதிமுறைகளைப் பின்பற்றி இன்னும் நேர்த்தியான முறையில் செயல்படுத்தப்படும்.

உதவித் தொகை பெறுவதற்கான தகுதி நிபந்தனைகள்:
• (அ) பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
• (ஆ) டிப்ளோமா,  இளங்கலைப் பட்டப்படிப்பு பயில்பவர்கள்.
• (இ) 2025/2026 கல்வித் தவணையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே.
• (ஈ) முழுமையான விண்ணப்ப ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்.

உயர் கல்வி 5.0 திட்டம் என்பது மலேசிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்யும் ஒரு தொடர் முயற்சியாகும். 

குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் ஆரம்பக் கட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2025-ஆம் ஆண்டிற்கான ‘மித்ரா உயர்கல்வி நிறுவன ஆரம்பக் கால சேர்க்கை உதவித் திட்டம்’  குறித்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், பொதுமக்கள் வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 03-88866192 என்ற எண்ணில் மித்ரா அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://spl@mitra.gov.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset