செய்திகள் இந்தியா
கேரளாவில் மனிதநேயமற்ற செயல்: விபத்தில் சிக்கிய பெண்ணிற்கு மருத்துவமனை செல்லும் வழியில் நேர்ந்த கொடுமை
கொச்சி:
கேரள மாநிலம் கொச்சியில், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண்ணிற்கு உதவி செய்வது போல நடித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், அவருக்கு உதவி செய்வதாகக் கூறி ஆட்டோ ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தற்காப்பு இல்லாத நிலையில் இருந்த அந்தப் பெண்ணிற்கு அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அப்பெண் நடந்த கசப்பான சம்பவத்தை மருத்துவர்களிடமும் உறவினர்களிடமும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குற்றவாளியைத் தேடி வந்தனர். தற்போது பிடிபட்ட அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரைக் காக்க வேண்டிய இக்கட்டான சூழலில், ஒரு பெண்ணிற்கு நேர்ந்த இந்த அவலம் சமூகத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
