செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
மத்திய பிரதேசம்:
பீகார் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு கட்டாய வேலைக்காக இரயிலில் கடத்தி வரப்பட்ட 163 சிறுவர்களைப் போலிசார் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட எட்டு நபர்களைப் இரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, பாட்னா-பூர்ணா விரைவு இரயிலில் பெருமளவிலான சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அழைத்துச் செல்லப்படுவதாகக் குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கட்னி இரயில் நிலையத்தில் காத்திருந்த பாதுகாப்புப் படையினர், ஞாயிறு அதிகாலை இரயில் வந்தடைந்ததும் சோதனையிட்டு உரிய ஆவணங்கள், பயணச்சீட்டுகள் இன்றி இருந்த அந்த சிறுவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட 6 முதல் 13 வயதுடைய இந்த சிறுவர்கள் அனைவரும் பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மகாராஷ்டிராவின் லத்தூருக்குக் கொத்தடிமைத் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது அச்சிறுவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 5:13 pm
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
