செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
மத்திய பிரதேசம்:
பீகார் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு கட்டாய வேலைக்காக இரயிலில் கடத்தி வரப்பட்ட 163 சிறுவர்களைப் போலிசார் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட எட்டு நபர்களைப் இரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, பாட்னா-பூர்ணா விரைவு இரயிலில் பெருமளவிலான சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அழைத்துச் செல்லப்படுவதாகக் குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கட்னி இரயில் நிலையத்தில் காத்திருந்த பாதுகாப்புப் படையினர், ஞாயிறு அதிகாலை இரயில் வந்தடைந்ததும் சோதனையிட்டு உரிய ஆவணங்கள், பயணச்சீட்டுகள் இன்றி இருந்த அந்த சிறுவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட 6 முதல் 13 வயதுடைய இந்த சிறுவர்கள் அனைவரும் பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மகாராஷ்டிராவின் லத்தூருக்குக் கொத்தடிமைத் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது அச்சிறுவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
