நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்லையோர பெட்ரோல் நிலையங்களில் போலிசார் காவலுக்கு நிறுத்தப்படுவார்கள்: சைபுடின்

பாடாங் பெசார்: 

நாட்டின் எல்லையோர பெட்ரோல் நிலையங்களில் போலிசார் காவலுக்கு நிறுத்தப்படுவார்கள்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

எரிபொருள் கடத்தலைக் கண்காணித்துத் தடுப்பதற்காக பெட்ரோல் நிலையங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நாட்டின் பொருட்களின் விநியோகம், விலையில் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், கடந்த வாரம் அமைச்சரவை பிறப்பித்த சமீபத்திய உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

இதில் எல்லைக் கோட்டிற்கு அருகே அடையாளம் காணப்பட்ட 80க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset