நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டிக்கெட் விலை உயர்வு நியாயமானது: பில்லி யோகன்

லண்டன்:

லண்டனில் கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை உயர்வு நியாயமானது.

லிவர்பூல் கிளப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பில்லி ஹோகன் கூறினார்.

அன்பீல்ட்டில் போராட்டம் நடத்தத் தயாராகி வரும் கிளப் ஆதரவாளர்களுக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில்,

டிக்கெட் விலை உயர்வுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்புகள் உண்மைகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அடுத்த மூன்று சீசன்களுக்கு பொது நுழைவுச் சீட்டுகளின் விலைகள் உயர்த்தப்படும் என்று லிவர்பூல் கடந்த மாதம் அறிவித்தது.

இந்த முடிவு ஆதரவாளர்களைக் கோபப்படுத்தியுள்ளது.


அவர்கள் நாளைஞாயிற்றுக்கிழமை பிரிமியர் லீக்கில் புல்ஹாம் அணியை எதிர்கொள்ளும்போது போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம் நடத்துவதற்கான ஆதரவாளர்களின் உரிமையை கிளப் மதிக்கிறது.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் போட்டி நடைபெறும் நாட்களுக்கான செயல்பாட்டுச் செலவுகள் 85 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை அவர் நியாயப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset