நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அல் நசர் அணியும், ரொனால்டோவும் சாம்பியன் ஆக வேண்டும் என சவூதி லீக் நடுவர்கள் விரும்புகின்றனர்: டோனி

ரியாத்:

அல் நசர் அணியும், ரொனால்டோவும் சாம்பியன் ஆக வேண்டும் என சவூதி லீக் நடுவர்கள் விரும்புகின்றனர்.

அல் அஹ்லி அணி வீரர் இவான் டோனி இதனை கூறினார்.

சவூதி புரோ லீக் நடுவர்களின் நேர்மையை அவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். 

மேலும், அந்த கிண்ணத்தை அந்த போர்த்துகல் நட்சத்திரத்திற்கு வழங்கப்படுவதாக அவரது அல் அஹ்லி அணி வீரர்கள் கூட குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று அல்-பாஹா அணியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த போட்டிக்குப் பிறகு, நடுவரின் முடிவை விமர்சித்த அல் அஹ்லி வீரர்களில் டோனியும் ஒருவர்.

இந்த முடிவின் மூலம், ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணியை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கி, அல்-அஹ்லி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தப் பருவத்தின் தனது 27ஆவது கோலை அடித்த டோனி, தனது அணிக்கு பல பெனால்டிகள் மறுக்கப்பட்டது.

இது குறித்து விளக்கம் பெற முயன்றபோது, ​​ஏஎப்சி சாம்பியன் லீக்கில் கவனம் செலுத்துமாறு நடுவர் தன்னிடம் கூறியதாக அந்த இங்கிலாந்து வீரர் மேலும் கூறினார்.

மிகப்பெரிய பிரச்சினை அந்த இரண்டு பெனால்டிகள்தான் என்று நான் நினைக்கிறேன்.

அது மிகவும் தெளிவாக இருந்தது, என்று டோனி போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset