நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது

விஜயவாடா: 

ஆந்திரப் பிரதேச மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 71 வயது முதியவரைப் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் சுப்பாராவ் என்ற அந்த முதியவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு மிட்டாய் தருவதாக ஆசை வார்த்தை கூறித் தனது கடைக்குள் வரவழைத்துள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் அந்தச் சிறுமிக்கு அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

வீட்டிற்குத் திரும்பிய சிறுமி, தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு, வலியைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதன்பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், முதியவர் சுப்பாராவ் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். 

மேலும், பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset