நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மங்கையராணி கிண்ண கால்பந்து போட்டியில் என்எஸ் மான் அணியினர் வாகை சூடினர்

பிறை:

மங்கையராணி கிண்ண கால்பந்து போட்டியில் என்எஸ் மான் அணியினர் முதல் நிலையில் வாகை சூடினர்.

மங்கையராணி கிண்ண கால்பந்து போட்டி பினாங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான 120 போட்டியாளர்களும் 24 அதிகாரிகளும் இப்போட்டியில் ஒன்றிணைந்தனர்.
குறிப்பாக இந்தப் போட்டியில் பினாங்கு, கெடா, நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இது பல்வேறு மாநிலங்களிலிருந்து வலுவான பங்கேற்பை வெளிப்படுத்தியது.

101 மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரியா, பினாங்கு இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவர் பிரேம்குமார்  ஆகியோர் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

மலேசியாவில் பெண்களின் கால்பந்தின் வளர்ச்சியில் இந்தப் போட்டித்தொடர் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

மலேசிய இந்திய கால்பந்து சங்கம் தற்போது முக்கியமாக 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளை ஏற்பாடு செய்து வரும் நிலையில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கு ஒரு தெளிவான இடைவெளி உள்ளது.

குறிப்பாக, சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் போன்ற பகுதிகளில் அதிக போட்டிகள் இருப்பதால் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கிறது.

இந்தத் தேவையை உணர்ந்து, பினாங்கு இந்தியர் அணி, பிறை கிராம சமூக மேலாண்மை மன்ற
அணியுடன் இணைந்து இந்தத் தொடரை ஏற்பாடு செய்ய முன்முயற்சி எடுத்தது.

இது இந்த இளம் வீராங்கனைகள் போட்டியிடவும், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியது.

இப்போட்டியில் என்எஸ் மான்  அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

பினாங்கு இந்தியர் அணி இரண்டாவது இடத்தையும் ஸ்மார்ட் எப்சி, யுனிவர்சல் எப்சி ஆகிய அணிகள் அடுத்தடுத்த நிலையில் வெற்றி பெற்றன.

அடுத்த கட்டமாக, தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் PSL 2.0 என்ற பொது மகளிர் கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்வதே அடுத்த திட்டமாகும் என ஏற்பட்டாளர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset