செய்திகள் மலேசியா
பொழுதுபோக்கு மையத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது: போலிஸ்
கோலாலம்பூர்:
பொழுதுபோக்கு மையத்தில் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செராஸ், தாமான் ஷாமெலினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடந்த நாசவேலை, கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்களை போலிஸ் கைது செய்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கைகளின் போது, இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல வாகனங்களையும் வளாகத்தின் நுழைவாயிலில் மோதுவதற்கு சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட லோரியையும் போலிஸ் பறிமுதல் செய்தது.
விசாரணை ஆவணங்களை நிறைவு செய்வதற்காக போலிஸ் தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 427ஆவது பிரிவின் கீழ் தேசத்துரோகக் குற்றத்திற்காகவும், 148-வது பிரிவின் கீழ் கலவரக் குற்றத்திற்காகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 11:19 pm
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மலேசியக் கப்பல்கள் செல்ல அனுமதி: ஈரானை பிரதமர் பாராட்டினார்
April 7, 2026, 5:56 pm
தகவல் தொழில்நுட்ப உபகரண விநியோகத்தில் ஊழல்: அரசு பெண் அதிகாரி கைது
April 7, 2026, 5:47 pm
மகிழ்ச்சியில் திளைக்கும் மலேசிய நகரங்கள் எவை தெரியுமா?
April 7, 2026, 5:28 pm
