நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவுப் பொருட்களின் சரக்கு போதுமானதாக உள்ளது; விலை உயராது: அமைச்சர்

மலாக்கா:

இறக்குமதி, உள்ளூர் உணவுப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருக்கும் வரை, பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது.

இதுவரை நாட்டின் உணவு விநியோகம் நிலையான அளவில் இருப்பதாகவும், எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை.

விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு இதனை தெரிவித்தார்.
விலை நிலைத்தன்மை என்பது நாட்டின் கையிருப்பில் உள்ள தற்போதைய இருப்புகளைச் சார்ந்துள்ளது.

மேலும், தற்போதைய விநியோகம் தீர்ந்து, பெரும்பாலும் வெவ்வேறு விலைகளில் பெறப்படக்கூடிய புதிய இருப்புகளைக் கொண்டு அதை ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நிலைமை மாறக்கூடும்.

அதன் விளைவு சூழ்நிலையைப் பொறுத்தது, நீண்ட காலத்திற்கு என்னால் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

எங்கள் கிடங்கில் உள்ள இருப்பு தீர்ந்து, புதிய விலையில் புதிய இருப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ​​விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset