நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வெறிச்சோடிக் கிடக்கும் சத்தியமூர்த்தி பவன்  காங்கிரஸ்  பட்டியல் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் தொண்டார்கள் 

 

சென்னை:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை காலை வெறிச்சோடிக் காணப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர, திமுகவிடம் பல்வேறு நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ், பல கட்டப் பேச்சுவார்த்தைக்கு பின், கடந்த தேர்தலைவிட 3 தொகுதிகளை கூடுதலாகவும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் பெற்றது.

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் மார்ச் 4 ஆம் தேதி இரவு கையொப்பமானது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுபெற்றது. தொடர்ந்து, காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை என்பதும் மார்ச் 28 ஆம் தேதியே திமுக தலைமை அறிவித்துவிட்டது.

வேட்புமனு தாக்கல் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு நாள்களே வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருக்கும் சூழலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset