நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோம்பீனில் போலிஸ் வேன் மோதியதில் மெக்கானிக் பலி

ரோம்பின்: 

நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் மலேசிய போலிஸ் வேனும் மோதியதில் மெக்கானிக் ஒருவர் கொல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர், 38 வயதான முஹம்மத் ஃபைசல் இஸ்மாயில், பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் ஜாலான் குவாந்தான்-ஜொகூர் பாருவின் 134 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7.20 மணியளவில் நடந்ததாக ரோம்பின் காவல்துறைத் தலைவர் ஷரீப் ஷாய் ஷெரீப் மொன்டோய் தெரிவித்தார்.

அந்தப் போலிஸ் வேனை 26 வயது நபர் ஒருவர் மற்ற ஐந்து பயணிகளுடன் ஓட்டிச் சென்றதாக அவர் கூறினார்.

பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைய வலதுபுறம் திரும்புவதற்கு முன்பு வேன் மாரானில் இருந்து ரோம்பின் காவல் தலைமையகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த போலிஸ்காரர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரோம்பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset